Source : எங்கோ படித்தது...
பொதுவாய் போப்பாண்டவராக இத்தாலியர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் ஜான் பால்தான் இத்தாலியரல்லாத போப். அவர் பிறந்தது போலந்தில். ஆனால் சுடப்பட்டதற்கு இது காரணமல்ல. போப் ஜான் பாலின் இயற்பெயர் கரோல் வாஜ்டிலா. போலந்தில் அப்போது அடக்குமுறை மிக்க கம்யூனிச ஆட்சி. கோயில்கள் தடை செய்யப்பட்டன. வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. கடவுள், ஆலயம், வழிபாடுகள் எல்லாமே கம்யூனிச அரசாங்கத்துக்குத் தெரியாமல் ரகசியமாய் நடைபெற்று வந்தன. இந்த அடக்குமுறை அரசால் பொதுமக்களுக்கு ஏகமாய் துயரம். இந்தச் சூழலில்தான் போப் வளர்ந்தார். ரகசியமாய் வேதம் படித்தார். மத குருவானார். அப்போது உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கம்யூனிசம் ஆட்சி செய்து கொண்டிருந்தது. 1978_ல் போலந்துக்காரரான ஜான் பால் போப் தேர்ந்தெடுக்கப்பட்டதுமே பல கம்யூனிசத் தலைவர்களுக்கு கலக்கம். ரஷ்ய உளவுத் துறையான கே.ஜி.பி.யின் தலைமைப் பொறுப்பிலிருந்த யூரி ஆண்ட்ரபோவ் (பின்னாளில் ரஷ்ய அதிபரானவர்), நமக்கு இனி தொல்லைதான்ஒ என்று பொலிட்பீரோ உறுப்பினர்களிடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு. போலந்தில் அடக்குமுறையை அனுபவித்து வளர்ந்த போப் அதற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அவர்கள் கருதினார்கள். உண்மைதான். அவர் போப்பாக பதவியேற்ற மறுவருடமே போலந்து சென்றார். பல வருடங்களுக்குப் பிறகு போலந்து நாட்டுக்கு வருகை தரும் ஒரு போப் என்பதால் ஏகப்பட்ட கூட்டம்_கிட்டத்தட்ட பத்துலட்சம் பேர் என்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் கூறிய மூன்று வாக்கியங்கள் அந்நாட்டு கம்யூனிச அரசாங்கத்தையே கவிழ்த்தது.
"நீங்கள் ஆண்கள். உங்களுக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. குழந்தைகளைப்போல் தவழ்ந்து கொண்டிருக்காதீர்கள்". இந்த வாக்கியங்கள் அடக்கு முறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மக்களை உசுப்பிவிட்டது. போலந்தில் மக்கள் போராட்டம் வெடிக்க கம்யூனிச அரசு கவிழ்ந்தது. போலந்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், சோவியத் யூனியனிலும் கம்யூனிசம் வீழத் துவங்கியது.
போப் ஜான்பால் அடிக்கடி சொன்னது, மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை வேண்டும் என்பதுதான். கடவுள் நம்பிக்கை இருந்தாலே உலகில் அன்பு பெருகும் என்பது அவர் எண்ணம். கம்யூனிச சித்தாந்தத்தில் இருக்கும் கடவுள் மறுப்புக் கொள்கையை அவர் விரும்பவில்லை. அதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தப் பின்னணிதான் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தக் காரணம்.
1983 மே மாதம் 13ம் நாள், புனித பீட்டர் சதுக்கத்தில், போப் இரண்டாம் ஜான் பாலை சுட்ட மெஹம்மத் அலி அஃகா துப்பாக்கியுடன்.

தன்னை கொலை செய்ய வந்தவனுக்கு சிறையில் சந்தித்து பாவமன்னிப்பு வழங்கும் போப்.

1 comments:
http://dharumi.blogspot.com/2009/04/302-3.html
Post a Comment