Share
skip to main | skip to sidebar

நான்

My Photo
சீனு
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#)
View my complete profile

Labels

  • கவிதை (4)
  • துணுக்குகள் (2)
  • மதம் (2)
  • கதை (1)
  • கார்ட்டூன் (1)
  • தீபாவளி (1)
  • பேட்டி (1)
  • பொதுவானவை (1)

விகடனில் நான்...

Facebook Badge

Alumni.Net - Bringing School Friends Together

ஃபாலோ மீ...

'Sweet' Messaging Service

பழைய சோறு

  • ▼  2008 (2)
    • ▼  October (1)
      • தீபாவளி வாழ்த்துக்கள்
    • ►  March (1)
  • ►  2007 (1)
    • ►  September (1)
  • ►  2006 (2)
    • ►  November (1)
    • ►  May (1)
  • ►  2005 (5)
    • ►  September (1)
    • ►  April (3)
    • ►  March (1)
  • ►  2004 (4)
    • ►  October (1)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  May (1)

விலைவாசி...

இது எப்படி இருக்கு?

இது எப்படி இருக்கு?

விகடனில் நான்...

  • ஒரு நிமிடக் கதை
  • நீங்கள் சென்னைவாசியாக சில உபயோக டிப்ஸ்!
  • சென்னைவாசிகளே...! பார்த்து போங்கப்பா...!!

Vb.net - p2p - Seenu

  • http://www.scribd.com/doc/7502371/Vbnet-p2p-Seenu
Visit blogadda.com to discover Indian blogs
கட், காபி, பேஸ்ட்...
Showing posts with label துணுக்குகள். Show all posts
Showing posts with label துணுக்குகள். Show all posts

Tuesday, March 11, 2008

நான் ரசித்த Jokes - 2


"டாக்டர்! இப்ப எங்கப்பாவுக்கு எப்படி இருக்கு?"

"எதையும் இருபத்துநாலு மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்!"

"இத நான் நேத்தே கேட்டதா நெனச்சு இப்ப சொல்லுங்களேன் டாக்டர்...!"




"சே! ஏந்தான் Parking Free-ன்னு அறிவிச்சாங்கன்னே தெரியலை!"

"ஏன்?"

"பெங்களூரிலிருந்து ஒருத்தன் தினம் இங்கே வந்து பார்க் பண்ணிட்டுப் போறான்யா."




"நம்ம நாற்பது தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை பார்த்து மக்கள் என்ன பேசிக்கறாங்க?"

"அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஞாபகத்துக்கு வர்றதா சொல்றாங்க தலைவரே!"




"தலைவரோட இள வயசு போட்டோ கிடைக்காம எல்லோரும் திணறிட்டாங்க!"

"அப்புறம்?"

"போலீஸ் ஸ்டேஷன்ல எஃப்.ஐ.ஆர்.ஃபைலில் இருந்து எடுக்க வேண்டியதாப் போச்சு!"




"மகாபாரதத்துக்கும், நம்ம பாரதத்துக்கும் என்னங்க வித்தியாசம்?"

"மகாபாரதத்துல, கர்ணன் அம்மா யாருன்னு தெரியலை...நம்ம மகாபாரதத்துல, அர்ஜுன் அம்மா யாருன்னு தெரியலை!"




"தன்னோட வாழ்க்கை அனுபவங்களைப் புத்தகமா எழுதிய அந்த போலீஸ்காரர் ஏன் வருத்தமா இருக்கார்?"

"ஆபாசப் புத்தகம்னு சொல்லித் தடை பண்ணிட்டாங்களாம்!"




"அந்த நடிகை தன் இடுப்பாலேயே நிறைய பேரை மயக்குறாங்க..."

"அப்ப, அவங்களுக்கு 'ஹிப்'னாட்டிசம் தெரிய்ம்னு சொல்லு!"




"டாக்டரை காதலிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு..."

"ஏன்?"

"அவர் தர்ற லவ் லெட்டர மெடிக்கல் கடைக்காரர்கிட்ட கொடுத்துதான் புரிஞ்சுக்க முடியுது..."




மாணவன்: "சார்...ஒரு சந்தேகம்..."

ஆசிரியர்: "என்ன?"

மாணவன்: "வி.சி.டி-ய ஒழிச்சுட்டா, அப்புறம் ஆங்கிலத்துல இருபத்து மூணு எழுத்துதானே சார் இருக்கும்?"




"டாக்டர்! ரெண்டு கண்ணையும் மூடவே முடியல..."

"இனிமேல் அந்தக் கவலை உங்களுக்கு வேணாம்!"




ஆற்காடு வீராஸ்வாமி ஸ்பெஷல்...



"நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்"

"அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க"




"இன்னும் எங்க கிராமத்துக்கு மின்சாரமே வரலைன்னு புகார் கொடுக்கலாம்னு வந்தேன்.
ஆனால், இங்கேயும் மின்சாரம் இல்லையாமே?"



Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

நான் ரசித்த Jokes - 2

Posted by சீனு at 3/11/2008 11:48:00 AM 6 comments
Labels: துணுக்குகள்

Monday, May 03, 2004

மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன் !!!


மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன் !!!


Jokes from ஆனந்த விகடன்...

 

"'குட்டி சாமியார்'ங்கிறது சரியாத்தான் இருக்கு..."

"எப்படி?"

"'ஓம்...க்ரீம்...ஐஸ்க்ரீம்'ங்கிறாரு..."



"அந்த டாக்டர் லல்லுவோட தீவிர ரசிகரா?"

"ஆமாம்! எப்படி கண்டு பிடிச்சே?"

"பாரு...குளுக்கோஸ் பாட்டிலுக்கு பதிலா பானையை கட்டி வெச்சு ட்ரீப் ஏத்தறார்..."





பேய் 1 : "எதுக்கு இப்படி அலறியடிச்சிட்டு ஓடி ஒளியறே?"

பேய் 2 : "என் பொண்டாட்டி திடீர்னு செத்து தொலைச்சிட்டா..."





"சிறையில் இருக்கும் என் கணவனைப் பார்க்க எனக்கு அனுமதி இல்லையா...ஏன்??"

"கைதிகளை கொடுமைப்படுத்துறதா எங்க மேல புகார் வருதே..."



"மகாபாரதத்துக்கும் நம்ம பாரதத்துக்கும் என்ன வித்தியாசம்?"

"மகாபாரதத்துல கர்ணன் அம்மா யாருன்னு தெரியலை...நம்ம பாரதத்துல அர்ஜுன் அம்மா யாருன்னு தெரியலை..."



"மெகா சீரியலுக்கு ஒரு டாக்டரை இயக்குனராக போட்டது தப்பாயிடுச்சு"

"எப்படி?"

"சீக்கிரமா கதையை முடிச்சுட்டாரு..."



"தலைவரே! நீங்க சின்ன வீடு அதிகமா வெச்சது தப்பாயிடுச்சு"

"ஏன்! என்னாச்சு...?"

"தேர்தல் பிரசாரத்தை முடிச்சிட்டு நைட்டு பத்து மணிக்கு மேல நீங்க சின்ன வீடுகளுக்கு போனதை வீடு வீடா வோட்டுக் கேட்கப் போனதா நினைச்சு தேர்தல் கமிஷன் உங்களை கண்டிச்சிருக்கு...!"



"இன்று மாலை சரியாக ஆறு மணியளவில் 'நடமாடும் தெய்வம்' எங்கள் அண்ணன் கபாலி நம்ம தலைவருக்காக வாக்கு சேகரிக்க வருவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும்படி

அன்போடு எச்சரிக்கிறோம்"



"இந்தாப்பா கபாலி. இந்த வழியாதான் என் மாப்பிள்ளை வருவார். 'உனக்குத் தலை தீபாவளி கேக்குதா'னு சும்மா மிரட்டினா போதும். எவ்ளோ கேக்குறே?"



"அம்மா செஞ்ச பலகாரத்தைச் சாப்பிட்டுட்டு அப்புறம் போய் பட்டாசு வெடியேண்டா..."

"வேணாம்ப்பா...மயக்கத்துல வெடிச்சா காயம் பட்டுடும்...!"



"மந்திரியாரே...மாதம் மும்மாரி பொழிகிறதா?"

"பொழிகிறது அரசே! மக்கள் உங்களை 'சோமாரி...கேப்மாரி...மொள்ளமாரி...' என வசைமாரி பொழிகிறார்கள்!"



போலீஸ் 1: "கேடி கந்தசாமியை என்கெளன்ட்டர் பண்ணதுக்கு இன்ஸ்பெக்டர் ஏன் டென்ஷனாயிட்டாரு?"

போலீஸ் 2: "சும்மாவா...மாசம் பொறந்தா ஒழுங்கா மாமூல் கொடுத்துட்டிந்தானே!"



"அப்பா! நான் ஒருத்தரை மனபூர்வமா காதலிக்கிறேன்"

"பையன் என்ன பன்றான்"

"இப்பொ வயித்துல எட்டி உதைக்கிறான்"



"டாக்டர்...என் மனைவிக்கு ஆபரேஷன் முடிஞ்சுடுச்சா...இனி பிராப்ளம் ஒன்னும் இல்லையே?"

"நோ பிராப்ளம்! இனிமே நீங்க உங்க மச்சினியை தாராளமா கட்டிக்கலாம்...!"



"மன்னா! குல்பி ஐஸ்காரன் நம்ம அரண்மனை வாசலைச் சுத்தி சுத்தி வரும்போதே நினைச்சேன்...இப்படித்தான் நடக்கும்னு!"

"என்ன நடந்தது அமைச்சரே?"

"வாசல்ல கட்டியிருந்த ஆராய்ச்சிமணியை காணோம் மன்னா...!"



"இன்டர்வியூல ரொம்ப கஷ்டமான கேள்வி கேட்டுட்டாங்க..."

"அப்படி என்ன கேள்வி?"

"இப்ப பிரதமர் வாஜ்பாய் எந்த நாட்டுல இருக்கிறார்னு...!"



"தலைவரே! நடிகைகளை கட்சியில சேர்த்தது தப்பா போய்டுச்சு"

"ஏன்?"

"அவங்கள்லாம் தனக்கு வயசு பதினாறுன்னு சொன்னதால...'உங்களுக்கே வோட்டு இல்லை. எங்ககிட்ட வோட்டு கேக்கறீங்க?'னு மக்கள் நக்கலா கேக்குறாங்க!"



"நமது 40 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்து மக்கள் என்ன பேசிக்கிறாங்க?"

"அலிபாபாவும் 40 திருடர்களும் ஞாபகத்துக்கு வர்றதா சொல்றாங்க தலைவரே!"



"யாரை எதிர்க்கனும்...யாருக்கு சவால் விடனும்கிறதே இன்னும் நம்ம தலைவருக்கு சரியாத் தெரியல!"

"என்னாச்சு?"

"'இப்போது எங்கள் செலவை நீங்கள் கண்காணிப்பது போல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் செலவை கண்காணிப்போம்'னு தேர்தல் கமிஷனுக்குச் சவால் விட்டுக்கிட்டுருக்காரு பாரு!"



"தலைவரே! ஆனாலும் ரொம்பத்தான் ஓவரா கோல்மால் பண்ணிட்டீங்க!"

"என்ன ஆச்சு இப்போ?"

"உங்க தொகுதியில 120 சதவிகித ஓட்டுக்கள் பதிவாகியிருக்குதுன்னு மறு தேர்தல் அறிவிச்சுட்டாங்க"



"6 பந்தை போட்டா அது ஓவர்...ஒரே நேரத்துல 6 பந்தையும் போட்டா அது ரொம்ப ஓவர்..."



"தமிழ் இலக்கியத்துல ஜெயலலிதாவுக்குப் பிடிக்காதது எது தெரியுமா...?"

"இனியவை நாற்பது...!"



"அந்தபுரத்தில ஏதோ கசமுசா போல தெரியுது..."

"எப்படி சொல்ற?"

"மன்னர் ரெண்டு நாளா நேரத்தோட சபைக்கு வர்றாரே!"





"ஏண்டா கோயில்ல இருக்க சாமி கிரீடத்தை திருடினே?"

"சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்...அதான்"




Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன் !!!

Posted by சீனு at 5/03/2004 04:56:00 PM
Labels: துணுக்குகள்
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Indli - India News, Cinema, Cricket, Lifestyle
Tamilish NewsPaanai.com Tamil News Sharing Site Thiratti.com Tamil Blog Aggregator
Home
Subscribe to: Posts (Atom)

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்