Share
skip to main | skip to sidebar

நான்

My Photo
சீனு
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#)
View my complete profile

Labels

  • கவிதை (4)
  • துணுக்குகள் (2)
  • மதம் (2)
  • கதை (1)
  • கார்ட்டூன் (1)
  • தீபாவளி (1)
  • பேட்டி (1)
  • பொதுவானவை (1)

விகடனில் நான்...

Facebook Badge

Alumni.Net - Bringing School Friends Together

ஃபாலோ மீ...

'Sweet' Messaging Service

பழைய சோறு

  • ▼  2008 (2)
    • ▼  October (1)
      • தீபாவளி வாழ்த்துக்கள்
    • ►  March (1)
  • ►  2007 (1)
    • ►  September (1)
  • ►  2006 (2)
    • ►  November (1)
    • ►  May (1)
  • ►  2005 (5)
    • ►  September (1)
    • ►  April (3)
    • ►  March (1)
  • ►  2004 (4)
    • ►  October (1)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  May (1)

விலைவாசி...

இது எப்படி இருக்கு?

இது எப்படி இருக்கு?

விகடனில் நான்...

  • ஒரு நிமிடக் கதை
  • நீங்கள் சென்னைவாசியாக சில உபயோக டிப்ஸ்!
  • சென்னைவாசிகளே...! பார்த்து போங்கப்பா...!!

Vb.net - p2p - Seenu

  • http://www.scribd.com/doc/7502371/Vbnet-p2p-Seenu
Visit blogadda.com to discover Indian blogs
கட், காபி, பேஸ்ட்...
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, May 12, 2006

தேவதைகளின் தேவதை - தபூ சங்கர்



நீ யாருக்கோ செய்த

மெளன அஞ்சலியைப்

பார்த்ததும்...

எனக்கும்

செத்துவிடத் தோன்றியது






நான் வழிபட

இந்த உலகத்தில்

எத்தனையோ கடவுள்கள்

இருக்கிறார்கள்.



நான் பின்பற்ற

இந்த உலகத்தில்

எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.



ஆனால்,

நான் காதலிக்க

இந்த உலகத்தில்

நீ மட்டும்தான் இருக்கிறாய்.




முனிவர்கள்

கடவுளைப் பார்ப்பதற்காகத்

தவம் இருக்கிறார்கள்.



நானோ,

ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு

தவம் இருக்கிறேன்




சிந்திய மழை

மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை

ஆனால்,

ஒவ்வொரு முறையும்

நீ சிந்தும் வெட்கமெல்லாம்

மீண்டும்

உன் கன்னத்துக்குள்ளேயே

போய்விடுகிறதே.




உன் பெயரில் உள்ள

இரண்டு எழுத்துக்களைத் தவிர

தமிழில் மிச்சமுள்ள

245 எழுத்துக்களும்

தினமும் புலம்புகின்றன.

'உனக்கு யார்

இரண்டெழுத்தில் பெயர் வைத்தது' என்று.




'நிலா ஏன்

தேய்ந்து தேய்ந்து வளர்கிறது?'

நீ அடிக்கடி

'நேரமாயிடுச்சு போகணும்' என்று

உன் வீட்டுக்குப்

போய்விட்டுப் போய்விட்டு வருகிறாய் அல்லவா

அதனால்தான்.






தான் வரைந்த ஓவியத்தை

கடைசியாக ஒரு முறை

சரி செய்யும் ஓவியன் போல

நீ ஒவ்வொரு முறையும்

உன் உடையைச் சரி சய்கிறாய்.






காற்றோடு விளையாடிக்

கொண்டிருந்த

உன் சேலைத் தலைப்பை

இழுத்து

நீ இடுப்பில்

செருகிக்கொண்டாய்

அவ்வளவுதான்...

நின்றுவிட்டது காற்று.




தொலைபேசியில்

நீ எனக்குத்தானே 'குட்நைட்'

சொன்னாய்.

ஆனால் இந்த இரவோ

அதைத்தான் நீ 'நல்ல இரவு'

என்று

சொல்லிவிட்டதாக நினைத்து

விடியவே மாட்டேன் என்று அடம்

பிடிக்கிறதே.




என்னை ஒரு

குடுகுடுப்பைக்காரனாய்

நினைத்துக்கொண்டு

ஓர் அதிகாலையில்

உன் வீட்டு முன் நின்று

'இந்த வீட்டில் ஒரு தேவதை

வாழ்கிறது'

என்று கத்திவிட்டு

குடுகுடுவென

நான் ஓடிவந்திருக்கிறேன்.




நான்

உன்னைக் காதலிக்கிறேன்

என்பதற்காக

நீயும் என்னைக்

காதலித்துவிடாதே!

என் கொடிய காதலை

உன் பிஞ்சு இதயத்தால்

தாங்க முடியாது




மழை வந்து

நின்ற பிறகும்

செடிகள் வைத்திருக்கும்

மழைத்துளிகளைப் போல

என் அறை வைத்திருக்கிறது

நீ வந்து போன பிறகும்

உன்னை.






எல்லா தெய்வங்களும்

தங்களைக் குளிப்பாட்டிவிட

பூசாரி வைத்திருக்கும்போது

நீ மட்டும் ஏன்

நீயே குளித்துக்கொள்கிறாய்?






புத்தர் இந்த உலகத்தில்

தோன்றி

ஒரு மார்க்கத்தைத்தான்

அமைத்தார்.

நீயோ என் எதிரில் தோன்றி

எனக்கொரு உலகத்தையே

அமைத்தாய்.




அன்று

நீ குடை விரித்ததற்காகக்

கோபித்துக்கொண்டு

நின்றுவிட்ட மழையைப்

பார்த்தவனாகையால்

இன்று

சட்டென்று மழை நின்றால்

நீ எங்கோ குடை விரிப்பதாகவே

நினைத்துக் கொள்கிறேன்.






உன்னைப் பார்த்தால்

எடை பார்க்கும் இயந்திரம்கூட

கவிதை எழுத

ஆரம்பித்துவிடும் போல.

உன் எடையை அடிக்கவேண்டிய

இடத்தில்

'அழகு நீங்களாக 50 கிலோ' என்று

அடித்திருப்பதைப் பார்!






'அமாவாசை அன்றுதான்

தீபாவளி வரும் என்பதால்

உங்கள் வீட்டுக்குத் தீபாவளி

வரவே வராது' என்றேன்.

அர்த்தம் புரியாமல்

'ஏன்' என்றாய்.

'உங்கள் வீட்டில்தான்

எப்போதும் பெளர்ணமியாக

நீ இருக்கிறாயே' என்றேன்.

'ஆரம்பிச்சிட்டீங்களா' என்று

நீ ஆரம்பித்தாய்

வெட்கப்பட...




உனக்கு வாங்கி வந்த

நகையைப் பார்த்து

'அய்...எனக்கா இந்த நகை'

என்று கத்தினாய்.

நகையோ,

'அய்...எனக்கா இந்தச் சிலை'

என்று கத்தியது.




கரையில் நின்றிருந்த

உன்னைப் பார்த்ததும்

கத்திவிட்டன

கடல் அலைகள்...

'கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே

விட்டோமா

நிலவை!' என்று.




இந்தா என் இதயம்.

விளையாடும்வரை

விளையாடிவிட்டுத்

தூக்கிப் போட்டுவிடு.

அது அதற்குத்தான்

படைக்கப்பட்டது!




ஒரு வண்ணத்துப் பூச்சி

உன்னை காட்டி

என்னிடம் கேட்கிறது...



'ஏன் இந்தப் பூ

நகர்ந்துகொண்டே

இருக்கிறது?' என்று!




உன் பிறந்த நாளையும்

பிறந்த நேரத்தையும்

காட்டுகிற ஒரு கடிகாரம்

என் அறையிலிருக்கிறது.



'கடிகாரம் ஓடலியா?'-என

யாராவது கேட்டால்

சிரிப்புத்தான் வரும்



அது காலக் கடிகாரம் அல்ல

என் காதல் கடிகாரம்!




அற்புதமான காதலை மட்டுமல்ல

அதை உன்னிடம் சொல்ல முடியாத

அதி அற்புதமான மெளனத்தையும்

நீதான் எனக்குத் தந்தாய்.




உன்னிடம்

என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக

எப்போதும் புலம்பியதில்லை நான்.

எனக்குள் இருந்த இதயத்தைக்

கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்




அடிக்கிற கைகள் எல்லாம்

அணைக்குமா என்பது தெரியாது.

ஆனால், நீ அடிப்பதே

அணைப்பது மாதிரிதான்

இருக்கிறது.




கண்ணாடித் தொட்டியில்

நான் வளர்க்கும் மீன்கள்,

உன் மீது புகார் வாசிக்கின்றன...

'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்

ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.






பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக.

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்?






'என்னை எங்கு பார்த்தாலும்

ஏன் உடனே நின்று

விடுகிறாய்?' என்றா

கேட்கிறாய்.



நீ கூடத்தான்

கண்ணாடியை எங்கு

பார்த்தாலும்

ஒரு நொடி நின்று விடுகிறாய்.



உன்னைப் பார்க்க உனக்கே

அவ்வளவு ஆசை இருந்தால்

எனக்கு எவ்வளாவு இருக்கும்!




உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம்

'தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்' என்று

ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே.




சீப்பெடுத்து

உன் கூந்தலைச் சீவி

அலங்கரித்துக்கொண்டாய்.

அந்தச் சீப்போ

உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து

தன்னை அலங்கரித்துக்கொண்டது.




நீ முகம் கழுவுகையில்

ஓடிய தண்ணீரைப் பார்த்துத்

திடுக்கிட்டுவிட்டேன் நான்.

ஒவ்வொரு நாளும்

அவ்வளவு அழகையா

வேண்டாமென்று

நீ நீரில் விடுகிறாய்.




நீ உன் முகத்தில்

வந்து விழும் முடிகளை

ஒதுக்கிவிடும் போதெல்லாம்

உன் அழகு முகத்தை

ஆழையோடு பார்க்க வந்த

முடிகளை ஒதுக்காதே என்று

தடுக்க நினைப்பேன்.

ஆனால் நீ முடிகளை

ஒதுக்கிவிடுகிற

அழகைப் பார்த்ததும்

சிலையாக நின்று விடுகிறேன்.






திருவிழா அன்று

கோவிலில் எல்லோருக்கும்

கஞ்சி ஊற்றிக்

கொண்டிருந்தாய்.

அடடா...

எல்லா ஊர்களிலும்

அம்மனுக்குக்

கஞ்சி ஊற்றுவார்கள்.

அங்கள் ஊரில்

அம்மனே கஞ்சி ஊற்றுகிறதே!






யாராவது

ஏதாவது

அதிர்சியான

செய்தி சொன்னால்

'அச்சச்சோ' என்று

நீ நெஞ்சில் கைவைத்துக்

கொள்வாய்.

நான் அதிர்ச்சி

அடைந்துவிடுவேன்!




நீ ஒரு கடி கடித்துவிட்ட

பழத்தைக் கேட்டேன்.

'எச்சில்...துடைத்துத் தருகிறேன்'

என்றாய் புரியாமல்.

'வேண்டாம்...வேண்டாம்...

நீ துடைத்துத்தான் தருவாய் என்றால்

பழத்தைத் துடைத்துவிட்டு

அச்சிலை மட்டும் தா!'




நீ ஆற்றில் குளிப்பதை

நிறுத்திவிட்டு

வீட்டுக்குள் குளியலறை கட்டிக்

குளிக்க ஆரம்பித்தாய்.

வறண்டு போனது

ஆறு.




எதற்காக

நீ கஷ்டப்பட்டுக் கோலம்

போடுகிறாய்...?



பேசாமல்

வாசலிலேயே

சிறிது நேரம் உட்கார்ந்திரு.

போதும்!






உனக்கு திருஷ்டி சுற்றி

வாசலில் உடைந்த பூசணிக்காய்

நன்றி சொன்னது...

உன் அழகு முகத்தை

மூன்று முறை

சுற்றிக் காட்டியதற்காக.






உலகிலேயே

அழகான

ஒன்றையொன்று ஒருபோதும்

பிரியாத

லவ் பேர்ட்ஸ்

உனது மார்புகள்.




நீ எந்த உடை அணிந்தாலும்

உன்னால்

உன்னைத்தான் மறைக்க முடியுமே ஒழிய

உன் அழகை மறைக்க முடியாது.




கர்ப்பக் கிரகம்

தன்னைத்தானே

அபிஷேகம் செய்து

கொள்ளுமா?



நீ சொம்பில் நீரெடுத்துத்

தலையில் ஊற்றிக்

குளித்ததைப்

பார்த்ததிலிருந்து

இப்படித்தான்

கேட்டுக்கொண்டிருக்கிறேன்

என்னை நானே!




உன் பிறந்தநாளைப் பார்த்து

மற்ற நாட்கள்

புலம்பிக் கொண்டு இருக்கின்றன...

பிறந்திருந்தால்

உன் பிறந்த நாளாஅய்ப்

பிறந்திருக்க வேண்டும் என்று.



Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

தேவதைகளின் தேவதை - தபூ சங்கர்

Posted by சீனு at 5/12/2006 08:50:00 PM 40 comments
Labels: கவிதை

Thursday, March 31, 2005

தபுசங்கர் பக்கங்'கள்'...


உன் குதிகாலை மையமாக வைத்து

ஒரு சுற்றுச் சுற்றி

கட்டை விரலால்

மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்...

குழந்தைகள் போனபிறகு

குடியிருப்பவன் நான்.




உன்னைக் காதலித்துக்

கொண்டிருக்கும்போது

நான் இறந்துபோவேனா

என்பது தெரியாது.

ஆனால்

நான் இறக்கும்போதும்

உன்னைக் காதலித்துக்

கொண்டிருப்பேன்

என்பது மட்டும் தெரியும்.




சின்ன வயதிலிருந்து என்னை

தொட்டுப் பேசும் பழக்கத்தை

நீ நிறுத்திக்கொண்ட போதுதான்

தெரிந்துகொண்டேன்...

நீ என்னைக் கட்டிக்கொள்ள

ஆசைப்படுவதை!




நீ சுத்த ஏமாளி.

உன்னை அழகுபடுத்திக்கொள்ள

நீ விலை கொடுத்து வாங்கிய

எல்லாப் பொருட்களுமே

உன்னைக்கொண்டு

தங்களை

அழகுபடுத்திக்கொள்கின்றன!




'ஒரு நிமிடத்தில்

உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க

தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று

கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...

'நீ கூடத்தான்

ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக

ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'




உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே!௕ என்று நான் சொன்னதுதான் தாமதம்... உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. 'ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்?'

என்றாய். 'பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம்.

அதற்குத்தான்!' என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, 'ஒரு நிமிஷம்... நான் துடிதுடிச்சுப் போயிட்டேன், தெரியுமா!' என்றாய்.



காதல் அப்படித்தான்... துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்!




நமக்குக் கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் சொல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன்' என்றேன். 'ஏன்... என் முகத்திலா அருந்ததி இருக்கிறது?' என்றாய். 'இல்லை...

அருந்ததியே உன் முகமாக இருக்கிறது!' என்றேன். நீ சிரித்துவிட்டு, 'அப்ப நான் மட்டும் வானத்தைப் பார்க்கணுமா?' என்றாய்.

வேண்டாம்... வேண்டாம். சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள்' என்றேன்.

ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?' என்றாய். 'சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது!' என்றேன். 'சடங்கில் இப்படியெல்லாமா விளையாடுவது?' என்றாய்.

சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!' என்றேன்.




உன் பிறந்த நாளையும்

பிறந்த நேரத்தையும்

காட்டுகிற ஒரு கடிகாரம்

என் அறையிலிருக்கிறது.



'கடிகாரம் ஓடலியா?'என

யாராவது கேட்டால்

சிரிப்புத்தான் வரும்



அது காலக் கடிகாரம் அல்ல

என் காதல் கடிகாரம்!




என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே!௕ என்றேன்.



கலங்கிப் போனாய். எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா?௕ என்றாய் உடைந்த குரலில்.



உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.



உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப்

பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.



'எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.



'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.



'ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!'




சீப்பெடுத்து

உன் கூந்தலைச் சீவி

அலங்கரித்துக்கொண்டாய்

அந்தச் சீப்போ

உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து

தன்னை அலங்கரித்துக்கொண்டது.




உன் பிறந்த நாளைப் பார்த்து

மற்ற நாட்கள்

புலம்பிக் கொண்டிருக்கின்றன...

பிறந்திருந்தால்

உன் பிறந்த நாளாய்

பிறந்திருக்க வேண்டும் என்று.




ஊரிலேயே

நான்தான் நன்றாக

பம்பரம் விடுபவன்

ஆனால் நீயோ

என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.




நீ இல்லாத நேரத்திலும்

உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது

உன் அழகு.




கோடை விடுமுறை வந்தால்

குளிர்ப் பிரதேசம் தேடி

ஓடுவதில்லை நான்.

ஆனால்

ஒவ்வொரு கோடை

விடுமுறையிலும்

என்னையே தேடி ஓடிவருகிறது

ஒரு குளிர்ப் பிரதேசம்.

அதற்குப் பெயர்

அத்தை மகள்




பழக்கடைக்குள் நுழைந்த நீயோ

ஆப்பிள்ளைக் காட்டி

'இது எந்த ஊர் ஆப்பிள்?'

'அது எந்த ஊர் ஆப்பிள்?' என்று

கேட்டுக்கொண்டிருந்தாய்.

ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்

கேட்டன

'நீ எந்த ஊர் ஆப்பிள்?'




உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!

அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.

ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன்.

வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன்.

'அய்யோ பாவம்!' என்றார் அப்பா.

'ஏம்ப்பா..?'

டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற

என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா & அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்...

இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே.

சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அபடி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.

அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!




'போதும் பார்த்தது

கண் பட்டுவிடப் போகிறது' என்றாய்.

ச்சே... ச்சே... உன்னைப் பார்ப்பதால்

என் கண்களாவது பட்டுப் போவதாவது?

துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.




கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்

கத்தி விட்டன கடல் அலைகள்...

கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே விட்டோ மா

நிலவை!௕ என்று.




தொலைபேசியில்

நீ எனக்குத்தானே 'குட்நைட்' சொன்னாய்.

ஆனால் இந்த இரவோ

அதைத்தான் நீ 'நல்ல இரவு' என்று

சொல்லிவிட்டதாக நினைத்து

விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே.




தான் வரைந்த ஓவியத்தை

கடைசியாக ஒரு முறை

சரி செய்யும் ஓவியனைப் போல்

நீ ஒவ்வொரு முறையும்

உன் உடையைச் சரி செய்கிறாய்.




காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த

உன் சேலைத் தலைப்பை இழுத்து

நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்.

அவ்வளவுதான்...

நின்றுவிட்டது காற்று.




முதலாட்டம் பார்த்துவிட்டு

உன் வீட்டைக் கடக்கையில்,

முதல்முதலில் உன்னை

இரவு உடையில் பார்த்த

அந்த முதல் இரவை

இன்னும் விடியவிடவில்லை நான்!




வெள்ளி

முளைக்கும்போது

நீ குளிக்கிறாயா?

இல்லை...

நீ குளிக்கும்போது

வெள்ளி

முளைக்கிறதா?




நீ குளித்து முடித்ததும்

ஒரு துண்டெடுத்து

உன் கூந்தலில்

சுற்றிக்கொள்கிறாயே...

அதற்குப் பெயர்தான்

முடிசூட்டிக் கொள்வதா?




கண்ணாடித் தொட்டியில்

நான் வளர்க்கும் மீன்கள்,

உன் மீது புகார் வாசிக்கின்றன...

'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்

ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.




என்னை

பைனாகுலர் பார்வை

பார்க்கின்றன

உன் மைனாகுலர் விழிகள்.




அடிக்கிற கைகள் எல்லாம்

அணைக்குமா என்பது தெரியாது.

ஆனால் நீ அடிப்பதே

அணைப்பது மாதிரிதான் இருக்கிறது.




உன்னை

எங்கெங்கெல்லாம் பார்க்கிறேனோ

அங்கெங்கெல்லாம்

நான் அப்படியே நிற்கிறேன்

இன்னும்.




என் செய்கைகளில் இருந்து

காதலை மட்டும் எடுத்துக்கொண்டு

காமத்தை உதறிவிடுகிற

அதிசய அன்னம் நீ.






Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

தபுசங்கர் பக்கங்'கள்'...

Posted by சீனு at 3/31/2005 06:37:00 PM 1 comments
Labels: கவிதை

Friday, October 15, 2004

நான் ரசித்த கவிதைகள் 2


Source : எங்கேயோ படித்தது...












அதிசயமாய்

இருக்கிறது



இத்தனை இனிய காதலர்களின்

காலடிச் சுவடுகளை

உள்ளிழுத்தும்



கடல் இன்னும்

உப்பு கரித்துக் கொண்டிருக்கிறது!











இரட்டை இனிமை

சில சமயம்

இரட்டை இம்சை!



காதலி சிணுங்கலும்

அவளது

கைப்பேசி அழைப்பின்

சிணுங்கலும்!



- கு.வைரச்சந்திரன்









நாம் சந்தித்துக்கொள்வதுண்டு.

ஆனால்,

நாம் பேசிக்கொண்டதில்லை.



என்னருகில் உள்ளவருடன்

நீயும்

உன்னருகில் உள்ளவருடன்

நானும்

பேசிக்கொள்வதுண்டு.



இதற்காக நாம்

வருத்தப்படுவதாகக்கூட

எனக்குத் தோன்றவில்லை.



பேசத் தயங்கிப்

பரிமாறிக்கொள்ளும்

புன்னகைகளும்

மௌனங்கள் தரும்

கனமான அர்த்தங்களும்

பேசுவதில்

நிறைவடைந்துவிடுமா என்ன?

- ஹம்ஸா









அவசியமில்லை...



நீரூற்றுபவனைப் பற்றித்

தெரிந்திருக்க...



பூக்களுக்கும்

பூக்களைப் போலவே

காதலுக்கும்!









எப்படி

அர்த்தப்படுத்திக் கொள்ளட்டும்...



என்முன்னே

கிழித்தெறிந்த கடிதத்தை

எனக்குத் தெரியாதபடி,

நீ

சேகரித்துச் சென்றதை?



- ஒப்பிலான்









இனி காத்திருக்கப் போவதில்லை!



மணி ஒன்று பதினைந்துக்கு

வரும் பேருந்துக்காக

பன்னிரண்டு மணிக்கே - வந்து

போகின்ற பேருந்தெல்லாம்

எட்டிப் பார்க்கும்போது

ஏற்படும் ஏளனப் பார்வைகள்

ஏராளம் - ஆனாலும்

ஏதும் அறியாமல் - நீ

பேருந்தில் நகர்கையில்தான்



நினைப்பேன்...



இனி காத்திருக்கப் போவதில்லை - என்று



தினம் - தினமும்!

- கு.கனிராஜ்




தபூசங்கர்




நீ

உன் தோழிகளோடு

கைப் பந்து

ஆடுவதுதான்

எனக்குத்

திருவிளையாடல்.



அற்புதமான காதலை

மட்டுமல்ல

அதை உன்னிடம்

சொல்ல முடியாத

அதி அற்புதமான

மௌனத்தையும்

நீதான் எனக்குத்

தந்தாய்.



அன்று



நீ குடை

விரித்ததற்காகக்

கோபித்துக் கொண்டு

நின்றுவிட்ட

மழையைப்

பார்த்தவனாகையால்



இன்று



சட்டென்று மழை

நின்றால்

நீ எங்கோ குடை

விரிப்பதாகவே



நினைத்துக்

கொள்கிறேன்.






அன்னை்


குற்ற நெஞ்சு குறுகுறுக்கும் - அதில்

குறைகள் பல உண்டு - எனைப்

பெற்றவள் செய்த சமையல் தான் அதில்

பிழைகள் கண்டதுண்டு - ருசி

அற்றுப்போன அமெரிக்க வாழ்வில்

பற்றே இல்லையடி - ஒரு

வற்றக்குழம்பு அதுபோதும் - அன்னைக்

கைமணம் அதில் வேணும்

- ரவி அன்பில்






பழநிபாரதி கவிதைகள்


வரவேற்பறை




கதவு திறந்ததும்

காற்றின் விரல்பட்டுச்

சிணுங்குகிறது

தொங்கும் அழைப்புமணி

பணமூட்டைகளைச்

சுமக்கும் குபேரன்...

பக்கத்திலேயே

கை தூக்கி நிற்கிறார்

சிரிக்கும் புத்தர்

கண்ணாடித் தொட்டியில்

தங்க மீன்களின்

விளையாடல்

வீட்டைச் சுற்றி

ஒரே கூட்டம்...

ஏலம் விட்டது

நீதிமன்றம்.



பூஜையறை




பிளாஸ்டிக் மாவிலைத்

தோரணங்கள்.

ஸ்டிக்கர் கோலங்கள்.

௔டப்பர் வேர்௕ டப்பாவிலிருந்து

ஊற்றுகிறார்கள்

விளக்குக்கு எண்ணெய்.

கடவுள் ஏன் கல்லானான்?

கேட்டான் கண்ணதாசன்...

கடவுள் ஏன் பிளாஸ்டிக்கானான்?

பார்த்துக் கொண்டிருக்கிறான் பழநிபாரதி.



குளியலறை


கைம்பெண் ஒருத்தியின்

குளியலறையில்

சுவரில் உள்ளது

ஸ்டிக்கர் பொட்டு.



சமையலறை




தீ

சமைக்கிறதா

எரிக்கிறதா?

தெரியாமலேயே

தாளிக்கிறாள் அவள்

காற்றில் கலந்து வெளியேறுகிறது

அவளது

பெருங்காய வாசம்.



படுக்கையறை




நீல வெளிச்சத்தில்

விலக்கப்பட்ட முள்தேடி

ஓயாமல் சுழல்கிறது

இசைத்தட்டு



திராட்சை பறிக்கும் பெண்ணின்

ஓவியத்திற்குக் கீழே

வெறுமையாக உள்ளது

பழக்கூடை.



பூனைகளுக்குக்

குழந்தைகளின் குரலைக் கொடுத்து

எதையெதையோ

கேட்க வைக்கிறது



இந்த இரவு.



வீடு




ஓரங்கிழிந்த பாய்

காரை பெயர்ந்த சுவர்

ஒட்டடை படிந்த ஜன்னல்

ஓசையெழுப்பும் மின்விசிறி

கலைந்த தலையணை

கழுவாத பாத்திரம்

என்றாலும் என்வீடு இனிது

எனில், எதிர்வீடு உனது








விருப்பம் போல் ஆணியடிக்க

விருந்தினரை உபசரிக்க

விடிய விடிய விளக்கெரிக்க

முடியாத வாடகை வீட்டில்

வசிக்கலாம், வாழமுடியாது








நகைவிற்று நிலம்விற்று

நடுநடுவே கடன்பெற்று

போய்ச்சேரும் புதுவீடு

புரிய வைக்கும்

நிம்மதியிழக்க எளியவழி

வீடு கட்டுவது








அண்ணாந்து வியக்க

அம்மா வீடு

மல்லாந்து கிடக்க

மாமியார் வீடு

நல்லவீடு ரெண்டிருந்தும்

சின்ன வீட்டுக்கேங்கி

செத்துத் தொலைவான்

இலங்கேஸ்வரன்








கூட்டிப் பெருக்ககொண்டாடிச் சிரிக்க

நீட்டிப் படுக்க

நிம்மதி சுகிக்க

கேட்கும் பக்தனுக்கு

இல்லை ஒரு வீடு

அப்பன் முருகனுக்கோ

ஆறு படைவீடு








கொளுத்திய பத்தி வாடை

கூடிவைத்த ஒப்பாரி

சிரிக்காத மாலைகள்

உறவு பிணக்குயென

கலவரப்படும் துக்க வீட்டில்

யாரிடம் வசூலிப்பது

கொடுத்த கடனை?








வீட்டுக்கு வீடு

இருக்கிறது வாசல்

எந்த வீடாயினும்சோறு கிடைக்கிறது

கலியமூர்த்திக்கு

பின் வாசலில்.








பியானோவில் விழுந்த பூனை

இசையெழுப்புதைப் போல

காதல் எல்லோரையும்

கவிஞனாக்கி விடுகிறது.ஒஒ






யாரோ... அவன் யாரோ..?




அடிக்கடி வருது

அந்தக் கனவு.

கொட்டும் மழை...

ஒற்றைக் குடை...

உள்ளே நானும் அவனும்.

அவன் முகம் மட்டும்

தெரிவதில்லை.

ஏனோ... அது ஏனோ..?



ராஜகுமாரன்..?




கொஞ்சம் பந்தா

நிறைய பணிவு...

கொஞ்சம் சில்மிஷம்

நிறைய சின்சியர்...

கொஞ்சம் கேர்லெஸ்

நிறைய பொஸஸிவ்னெஸ்...

எங்கேடா இருக்கே

என் செல்லம்..?ஒஒ



காதல்ங்கிறது?




இதயத்துல ஹைட்ரஜன் பாம்

அடிவயித்துல சல்ஃப்யூரிக் ஆசிட்

மூச்சுல லோ&ஆக்ஸிஜன்

கிறங்கடிக்கிற கெமிஸ்ட்ரிபா!

ஊ லலல்லா

உள்ளம் கேட்குமே மோர்!ஒஒ



காதலர்களுக்கு..?




சில காலம் சேர்ந்து

சில காலம் பிரிந்து

ஆயுசுக்கும் சொல்லிட்டேயிருங்க

ஐ லவ் யூ..!ஒஒ



அப்ளிகேஷன்ஸ்..?




இவ்ளோ.... வந்திருக்கு!

எல்லாவற்றிற்கும்

நோஒ சொன்ன

இடியட் பியூட்டி நான்.ஒஒ






காதல்




என்னை

உடைப்பதற்காகவே

என் எதிரில்

சோம்பல் முறிப்பவள் நீ



நீ யாருக்கோ செய்த

மௌன அஞ்சலியைப்

பார்த்ததும்...

எனக்கும்

செத்துவிடத் தோன்றியது



நீ ஊதித் தந்த

பலூன் நான்.

எனக்குள் உன் காற்று

இருக்கும் வரை

காதல்

என்னை விளையாடிக்

கொண்டிருக்கும்.



நான்

உன்னைக் காதலிக்கிறேன்.

என்பதற்காக

நீயும் என்னைக்

காதலித்துவிடாதே!

என் கொடிய காதலை

உன் பிஞ்சு இதயத்தால்

தாங்க முடியாது



என்னை ஒரு

குடுகுடுப்பைக்காரனாய்

நினைத்துக்கொண்டு

ஓர் அதிகாலையில்

உன் வீட்டுமுன் நின்று

இந்த வீட்டில் ஒரு தேவதை

வாழ்கிறது

என்று கத்திவிட்டு

குடுகுடுவென

நான் ஓடிவந்திருக்கிறேன்.






அடி, என்னை மறந்தவளே..!




செட்டியார் வீடு கட்ட

கொட்டிப் போட்ட

மண்ணுல

கோபுர வீடுகட்டி

கொஞ்சி விளையாண்டது

நினைவிருக்கா?



தெருவோரம் நின்ன மரம்

என் திண்ணையோரம்

நட்ட மரம் (மின்கம்பம்)

எப்படித்தான் எரியுதுன்னு

என்னைக் கேட்டியே,

நினைவிருக்கா?



வட்டிலில சோறுபோட்டு

வானத்து நிலா பார்த்து

ஒண்ணா உட்கார்ந்து

உருட்டித் தின்னமே

உனக்கது நினைவிருக்கா?



பள்ளிக்கூடம் போகயில

பாவி மழ பெய்யயில

ஓடிப் போய் மரத்தடியில்

ஒண்டியது

நினைவிருக்கா?



வீடு திரும்பயில

விட்ட மழ தொடரயில

உன் சந்தன முகத்துல

சாரல் படக்கூடாதுன்னு

என் சட்டையக் கழட்டித்

தந்தேனே நினைவிருக்கா?



விளையாட நீ வரல,

வீதியில காணவில்லே

உன் வீடுதேடி நான்

வந்தேன்

அந்த நாள்

நினைவிருக்கா?



பச்ச ஒலையில

பத்திரமா நீயிருந்த

பதினாறு வயசு வியாதி

பத்திக்கிச்சு நமக்குள்ள

பட்டப் படிப்பு படிச்சு வர

உன்னை

பஸ் ஏத்தி அனுப்பி

வெச்சேன்



பாவி மக உம் பெயரை

மனசுக்குள்ள செதுக்கி

வெச்சேன்



எல்லாமே மாறிப் போச்சு



என்னனென்னவோ

ஆகிப்போச்சு



எம் மகளும் உம் மகனும்

ஒண்ணா

விளையாடுதுங்க



நாளைக்கு அதும்

பொழப்பு

நம்மப் போல ஆகணுமா?

நாங் கண்ட ஒரு கனவு

நாசமா போகணுமா?

- எடிசன்






ஜெய பாஸ்கரன் கவிதைகள்




துப்பாக்கித் தோட்டா

துளைத்த நிலையிலும்

தான் சொல்லவேண்டிய

அனைத்தையும்

தெளிவாகச் சொல்லிவிட்டு

உங்கள் கதாபாத்திரம்

சாகும்போது,

கூடவே சாகிறது

சினிமா!



திரையிட்ட

பதின்மூன்றாயிரம்

அடியைவிட

நன்றாக இருக்குமோ

என எண்ணத்

தோன்றுகிறது |

எடுத்து எடுத்து நீங்கள்

வெட்டி வீசிய

நாற்பதாயிரம் அடி!



நீச்சல்குளத்தில்

நீச்சல் உடையில் நீராடி,

அதே உடையில்

நடுச்சாலையில் நடனமாடி,

பூங்காக்களில்

படுத்துருண்டபோதெல்லாம்

வராத வெட்கம்,

எங்கிருந்தோ வந்துவிடுகிறதே

உங்கள் கதாநாயகி

மணமகளாக மாறும்போது!



அயல்நாடுகளில்

நீங்கள்

ஆடிப் பாடும்போதெல்லாம்

அசையாமல் நின்றுபார்த்து,

அதிர்ச்சியுறுகிறார்கள்

அந்நாட்டு மக்கள்!



தான் காதலிக்க ஒரு பெண்

தன்னைக் காதலிக்க ஒருபெண்

பாசமாகத் தோளில் சுமக்க

ஒரு தங்கை

எனும் வகையில்,

குறைந்தபட்சம்

மூன்று பெண்களாவது

தேவைப்படுகிறார்கள் |

உங்களின் ஒரு

கதாநாயகனுக்கு!



வயது

ஒரு பிரச்னையே

இல்லை |

உங்களின்

கதாநாயகர்களுக்கு...

அது மட்டுமே

பிரச்னை

கதாநாயகிகளுக்கு!



திருட்டு

வி.சி.டி|க்காரர்கள்மீது

எனக்குக் கோபம்தான்...

எதைத் திருடுவது

என்கிற

விவஸ்தையில்லாதவர்கள்!



சொல்ல நினைத்த நியாயத்தை

நாலுவரி எழுதி, மேலே நகரவிட்டு,

அதைப் படிக்கவும் செய்தீர்களே...

அப்போதுதான்

மீண்டும் உறுதி செய்துகொண்டேன் |

அந்த இரண்டரை மணிநேரப் படத்தில்

நீங்கள்

எதையுமே சொல்லவில்லை என்பதை!






குழந்தைகள்




வேதனையும் வாழ்க்கையின்

ஒரு பகுதிதான் என்று

குழந்தைகளுக்குக் கற்பிக்காதீர்கள்,

அவர்களாவது ஆனந்தமான மனிதர்களாக

வளரும் வாய்ப்பை ஏன் பறிக்கிறீர்கள்?



Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

நான் ரசித்த கவிதைகள் 2

Posted by சீனு at 10/15/2004 05:32:00 PM 1 comments
Labels: கவிதை

Wednesday, July 07, 2004

நான் ரசித்த கவிதைகள்


Source : பலவற்றின் தொகுப்பு (சத்தியமா நான் இல்லீங்கோ...)











கந்தையானாலும்

கசக்கிக்கட்டு

சரிதான்.

அது காயும்வரை

எதைக் கட்டுவது?






பயணம்




ஒவ்வொரு

இரவு நேரப் பயணத்திலும்

பேருந்தோ

இரயிலோ

யாரோ ஒருவன்

தூக்கம் இழக்கிறான்



யாரோ ஒருவன்

பட்டினி கிடக்கிறான்



யாரோ ஒருவன்

எதையோ

பறி கொடுத்துத்

தவிக்கிறான்



யாரோ ஒருவன்

இடம் மாறி

இறங்கித் தொலைக்கிறான்



யாரோ ஒருத்தி

கணவனுக்குத்

துரோகம் இழைக்கிறாள்











மணமகளாய்

மாப்பிள்ளையுடன்

மகளை

வழியனுப்பி

வீடு வந்த அம்மாவின்

சுருக்குப் பைக்குள்

சுருங்கிக் கிடக்கின்றன

மகளின்

காதல் கடிதங்கள்






காமம்




யாவரும்

வந்து சேரவேண்டிய புள்ளி



யாவரும்

சுற்றிச் சுழலும் அச்சு



யாவரும்

நீந்திக் கடக்காத சாகரம்



யாவரும்

இளமையைத் தொலைத்த மணல்



யாவரும்

எண்ணித் துணிந்த கருமம்



யாவரும்

தாயம் உருட்டிய கட்டம்



யாவரும்

தலை குனிந்து இரந்த யாசகம்



யாவரும்

உயிர்த்திருக்கப் பருகிய நஞ்சு.











அவன்

மனைவியைத் துறந்து வந்தாள்



அனள்

கணவனைத் துறந்து வந்தாள்



இருவரும் வாழ

போதிய இடமிருக்கிறது



இருவருக்கும் சேர்த்தே

கனிகள் விளைகின்றன



இருவருக்கும் பொதுவாக

பொழுது புலர்கிறது



பொத்திக் கொள்க

தூற்றுமொழி தூற்றும்

உமது நற்ற வாயை











'வேண்டவே வேண்டாம்' என்பாள்

'மாட்டவே மாட்டேன்' என்பாள்

'ஆகவே ஆகாது' என்பாள்

'முடியவே முடியாது' என்பாள்



கடும் எதிர்ப்பால்

அடம் பிடிப்பாள்



கடைசியில் எண்ணச் செய்வாள்

இவளா வேண்டாம் என்றவள்?











உனக்கும் எனக்கும் இடையில்

பொய்யறு புன்னகை

சதா

சிந்திக்கொண்டேயிருக்கிறது



உன் மனதுக்கும் தெரியும்

என் மனதுக்கும் தெரியும்



நமக்குள் ஒரு

நாள்

மெய்யுறு புணர்ச்சி

நிகழத்தான் போகிறது



நமது புன்னகை

அத்தனை அர்த்தத்துடன்

உதிக்கிறது











பொருட்பெண்டிரக்

கைது செய்யும் காவலர்



அவள்

அருட்பார்வையை இரப்பர்

அய்யாவுக்குத் தெரியாமல்









நாளைக்கு இது

வேண்டுமென்ற

வேட்கை

வாழ்க்கையை

அப்படியே வாழச் சொல்கிறது











எனக்கு

சங்கீதம் தெரியாது



பாடும் குமரியர் பாவனைகள்

எனக்குள் எழுப்பாத இசையா






கல்யாணா ரிசப்ஷன்




யார் யாரோ யார் யாரோ

வருவார்கள் போவார்கள்

வாயால் புன்னகைப்பார்கள்



பரிசென்று பாக்கெட்டுகள் குவியும்

பரும்பாலும் இஸ்திரிப் பெட்டி



மாலையில் ஜிகினா கழுத்தறுக்க

மேளசப்தம்

மண்டைக்குள் இடிக்கும்

உடம்பெல்லாம் எரியும்



உள்ளங்கை ஈரமாகும்

கால்கள் பூட்சுக்குள்

காற்றுக்காய்த் தவிக்கும்

கெடிகாரம் நகராது



அத்தனை கண்களின்

அவஸ்தை தரும் பார்வை வேறு

இத்தனைக்கும் நடுவில்

மகத்தான ஆறுதலாய்

என்னருகில், மிக அருகில்

உன்

வெள்ளை விரல் நுனியில்

மருதாணி.



- ம. பூரணி






பேருந்து.




நிறுத்தத்தில்

நிற்காமல் போகும்

பேருந்தைத்

திட்டுவதும்

எல்லா நிறுத்தத்திலும்

நின்று நின்று போகும்

பேருந்தைத்

திட்டுவதும்

பயணியர்க்கே வாய்ந்தது








பெண்கள் / ஆண்கள்

புகை பிடிக்காதீர்

படிகளில் பயணம் செய்யாதீர்

திருக்குறள்

வள்ளுவர் புகைப்படம்

ஜன்னலில் கை நீட்டாதீர்

எதையும் அறியாது

பயணம் செல்வர்

கல்லூரி மாணவர்!








நெரிசல் பேருந்தில்

தொடை இடித்து மார்பு நசுங்க

தோள் பையுடன் ஏறினாள்

அய்ந்தரை மணிப் பெண்.

அக்குள் நாற்றங்களைச் சுவாசித்து

மேல்கம்பியை ஊன்றுகோலாய்த் தாங்கி

மேடுபள்ளங்களில் குலுங்கி

வியர்வைக் குளியலில் நனைந்து

மனித மூட்டைக்குள் திணறி

பெருமூச்சோடு இறங்கி நடந்தாள்

பயணச் சீட்டின் பின்புறம் எழுதிய

மீதிச் சில்லறையை மறந்தவாறு!








அமரர் ஊர்தி விபத்து.

ஜன்னல் வ்ழியே

எட்டிப் பார்த்தது பிணம்

இன்னொரு பிணத்தை!








யாரோ எடுத்த வாந்திமேல்

மணல் தூவப்பட்டதில்

நெரிசலிலும்

காலியாகவே இருந்தது

ஓர் இருக்கை!








வார இதழ் படித்தவாறு

பயணம் போகும் பெண்ணுக்கு

எப்படித் தெரிகிறதோ,

அவள் இறங்கும் நிறுத்தம்.






ஒரே குரல்...




இடிந்து கிடக்கின்றன

மசூதிகள்...

இடிபாடுகளின்

உள்ளிருந்து

எட்டிப்பார்க்கிறான்

இறைவன்!



எரிந்து கிடக்கின்றன

தேவாலயங்கள்...

சாம்பல் குவியலில்

மெல்ல அசைகிறது

கர்த்தரின் தலை!



காயம்பட்டு கிடக்கின்றன

கோவில்கள்...

காதுகளைப் பொத்தியபடி

கண்திறந்து பார்க்கிறான்

கடவுள்!



வேடிக்கை பார்த்துக்

கொண்டிருக்கும்

கூட்டத்தை நோக்கி

மூவரும் கேட்கிறார்கள்

ஒரு கேள்வி...



"உங்களில் யாராவது

ஒரு மனிதன் இருந்தால்

வரச் சொல்லுங்கள் -

ஒன்றாக நாங்கள்

உயிர்த்தெழுகிறோம்!"



- மு. மேத்தா






அமெரிக்காவில்...




அம்மா இங்கே

அசலான நெல்லூர்

அரிசி கிடைக்கிறது

டாலர் அதிகமில்லை

வடிப்பது சுலபம்

மைக்ரோவேவ் அடுப்பில்

வெந்து முடிக்க

ஐந்தே நிமிடங்கள்

கஞ்சி வடிக்கும்

கஷ்டங்கள் இல்லை

கரிப்பிசுக்கு

கல்நெல்லில்லை

ஆனால் ஏனோ

இந்திய அடுப்பில்

அழுதுகொண்டு தினமும்

அரைக் குழைசலாய்

நீ வடித்த ஐ ஆர் எட்டின்

சுவைகூட இல்லை!



- வெ. அனந்தநாராயனன்








குழந்தை




இதம் வேண்டி

என் கைகோர்த்து

உறங்கும் குழந்தையின்

கைகள்

நம்பிக்கொண்டிருக்கின்றன

கனவில் விரட்டும்

பிசாசுகளிடமிருந்தும்

புலிகளிடமிருந்தும்

காப்பாற்றித் தருவேன் என

நள்ளிரவில் துழாவும்

குழந்தைக்கு தட்டுப்படுகிறது

கசங்கிய படுக்கை விரிப்பு






காலம்




பாட்டிக்கு மண்குடம்

அம்மாவுக்கு பித்தளைப் பானை

எனக்கோ பிளாஸ்டிக் குடம்

மகளுக்கு வாய்த்திருக்கிறது

வாட்டர் பாக்கெட்






வாழ்க்கை




தெருமுனையிலேயே

ஒதுங்கிக் கொள்வாளாம்

பெரியாயி கிழவி



வீட்டுக் கொள்ளைவரை

அனுமதித்திருந்தாள்

லட்சுமி பாட்டி



பாத்திரம் தேய்க்க

துணி துவைக்க

முற்றம் வரை

நடமாடவிட்டாள் அம்மா



வீட்டுச் சாவி தந்து

விரைகிறேன் நான்



வழிக்கு வரவைத்து

விடுகிறது

வாழ்க்கை






படிப்பு




புத்தக மூட்டை

உணவுப் பைகளெல்லாம்

வசதியாக இடம்பிடித்திருக்க

தொங்கிக்கொண்டே

செல்கின்றன குழந்தைகள்

எல்லா ஆட்டோ க்களிலும்






விபத்து




விபத்து நடந்த இடத்தை

கண நேர தாமதமின்றி

கடக்கிறேன்

பூர்வீக வீட்டை

ஒரு சொட்டு கண்ணீரின்றி

காலி செய்தேன்

குழந்தைகளின் ஆர்ப்பரிப்பை

கூச்சலென்று

புறந்தள்ளி நடக்கிறேன்

செய்திகளில் தெறிக்கும்

ரத்தம் பார்த்தும்

சாப்பாட்டைத் தொடர்கிறேன்

தெரிந்து கொண்டிருப்பீர்கள்

கண் விழித்ததும்

தொட்டிச் செடிகளுக்கு

நீரூற்றும்

சராசரி நானென்று






திருவிழா




திருவிழாவின் சந்தோஷத்தை

காற்றடைத்த பலூனாக்கி

கையசைத்தவாறே

திரும்புகிறார்கள் குழந்தைகள்






விடியலே...விடியலே!




சைதாப்பேட்ட சரோசாக்கு

கோழி கூவியும் விடியலே

சரக்கடிச்ச மச்சானுக்கு

மப்பு இன்னும் தெளியலே

சிட்டி பஸ்ஸு இடிச்சதுல

சின்னசன் காலு வெளங்கலே

இஸ்கூலு போன மக

எங்க போச்சோ திரும்பல

எவ்ளோ நேரம் காத்திருந்தும்

மெட்ரோ லாரி வரவில்லே

கட்டட வேல போனாக்க

மேஸ்திரி கண்ணு சரியில்லே

மீட்டர்வட்டி மின்னல்வட்டி

சேட்டு தொல்ல தாங்கல

ஒழச்சுக் கொட்டுற புருஷனா

சாமி கிட்ட வாங்கல

காதல் சொன்ன பால்பாண்டி

மூஞ்சி இன்னும் மறக்கலே

சைதாப்பேட்ட சரோசாக்கு

கோழி கூவியும் விடியலே.






தூங்காதே தம்பி தூங்காதே...




தொங்காதே...பஸ்ல தொங்காதே

நீ தொங்கினாலிம் ஃபிகரைப் பார்த்து மங்காதே

படிக்கட்டில் தொங்கியவன் பல்லை இழந்தான்

ஜன்னல் கம்பியில் தொங்கியவன் காலை இழந்தான்

ஃபுட் போர்டில் தொங்கியவன் கையை இழந்தான்

இப்படி பொருப்புள்ள இளைஞர்கள் சாவதினால்

நம்மை நம்பி வந்த ஃபிகரு எல்லாம் ஏங்குதப்பா!






முத்தம்




ஒரு

விளக்கேற்றுவதுதான்

முத்தம்.

ஆனால்...

விளக்கைப் போல

சட்டென்று

ஊதியணைக்க முடியாது.



கொடுக்கும் முத்தத்தைவிட

லேசானது

வாங்கும் முத்தம்

ஆனால்...

லேசாக

வாங்கிவிட முடியாது.



- பழநிபாரதி




மறதி




கற்புக்கரசி

கண்ணகி, சீதை,

நளாயினி

பெயரெல்லாம்

நினைவில் நிற்கிறது!



கற்றுக்கொடுத்த

தமிழ் ஆசிரியை

பெயர்தான்

மறந்துவிட்டது!




கால காலமாய்


காலிலே சலங்கை பூட்டி

கோவிலிலே ஆடவிட்டீர்கள்!



முதுகிலே சூடுவைத்து

அந்தப்புரத்திற்குள்

அனுப்பினீர்கள்!



உப்பில்லாத வ்ணவு கொடுத்து

மூலையிலே அமர்த்தினீர்கள்!



சந்தேகம் வந்தபோதெல்லாம்

நெருப்பிலே இறக்கினீர்கள்!



இப்போது...

வேலைக்கு அனுப்பிவிட்டு

வேவு பார்க்கிறீர்கள்!




பல்லவி


குடிப்பதற்கு தண்ணீர் தேடி

இரவெல்லாம் கண்விழித்து

வீதி வீதியாய்

குடங்களோடு அலைந்தோம்...



எங்கள் துயரம் தீர்க்க

எம்.எல்.ஏ-வை தேடினோம்!



தொலைபேசியில்

எப்போது கேட்டாலும்

கிடைத்த பதில்..



"தூங்குகிறார்..."

"குளித்துக்கொண்டிருக்கிறார்"




நன்றி


பேருந்து நெரிசலில்

சிக்கித் தவித்த

அந்த தாயிடமிருந்து

குழந்தையை வாங்கினேன்.



இறங்கிச் செல்கையில்

நன்றியோடு பார்த்தாள்...

கைப்பிள்ளையின்

கால் கொலுசை தடவியபடி!




அவதாரம்


வேலு நாச்சியாராய்

குதிரை மீது ஏறிவந்தேன்.



இராணி மஙகம்மாளாய்

வீரவாள் சுழற்றினேன்.



ஜான்சி ராணியாய்

எதிரிகளை பந்தாடினேன்.



குக்கர் சத்தம் கேட்டது

சமையலறைக்குள் ஓடினேன்!




நீ?


தந்தையை,

கணவனை,

சகோதரனை,

தன் சிறுவயது மகனை,

போர்க்களம் அனுப்பிய

புறநானூற்றின்

வீரத்தாயே...!



எல்லோரையும் அனுப்பிய

ந்ண ஏன் போகவில்லை?




ஜிலீர்...


ஆசிரியராகும் கனவு

உடைந்து நொறுங்கியது!

அரசு மது பாட்டில்களை

அடுக்கி வைக்கும் வேலையில்...




அன்பு




அன்பு

என்ற தலைப்பில்

மிகச் சிரிய

கவிதை

கேட்டார்கள்...

"அம்மா"

என்றேன் உடனே...

கேட்டது அம்மாவாக

இருந்திருந்தால்

இன்னும் சிரியதாய்

சொல்லியிருப்பேன்

"நீ"

என்று...






நினைவு


குழந்தையோடு கொஞ்சிக்

கொண்டும்

மனைவியோடு சந்தோஷமாய்

பேசிக்கொண்டிருக்கும்

மாலைப்பொழுதுகளில்

ந்஢னைவுக்கு வந்து

உருத்துவாள்

முதன்முதலில் பெண் பார்த்து

இன்னும் திருமணமாகாத

அந்தப் பெண்!




நான்


அம்மாவிற்கு மகனாய்

அப்பாவிற்கு வாரிசாய்

அண்ணனுக்கு அடிபணியும்

தம்பியாய்

நண்பர்களுக்கு

நன்றியுள்ளவனாய்

காதலிக்கும்போது

காதலனாய்

சிரிப்பவர்களுடன் சிரித்து

அழுபவர்களுடன் அழுது...

எப்பொழுது,

எங்கே,

எது நான்?







காத்திருந்து காத்திருந்து

சோர்கையில்

நீ வருவாய்

கோபப்படுவேன் நான்

வெட்கப்படத் தெரியாததால்...




காதல்?


இடமற்று நிற்கும்

கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க

பேருந்துக்கு வெளியே

பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம்

எதை எதிர்பார்க்கிறாய்...

காதலையா???




அமைதி


கல் சிலைகள்

கல் விளக்குகள்

கல் சங்கிலிகள்

கல் சிற்பங்கள்

மற்றும்

கல் தூண்கள்

எப்போதும்

பேசிக் கொண்டிருக்கின்றன

கோயில்களில்

உறைந்து கிடக்கும்

கனத்த அமைதியின்

ரகசியத்தை




காதல்


தண்டவாளத்தில்

தலை சாய்த்துப்

பூத்திருக்கும்

ஒற்றைப் பூ

என் காதல்...

நீ நடந்து வருகிறாயா?

இரயிலில் வருகிறாயா?







காதல்

ஒரு விணோத நெருப்பு

அது

பற்றவைத்தால்

பற்றாது

அணைத்தால்

அணையாது...







என்ன புண்ணியமோ...

வாசலில் கையேந்தும்

குருடனைக் கடந்துபோய்

கோயில் உண்டியலில்

போடும் பணத்தால்...




வாழ்ந்து கெட்டவரின்

வீட்டை

விலை பேசி

முடிக்கும் பொழுது

கேட்கலாம்

கொல்லை புரத்தில்

ஒரு

விசும்பலை...




அடி தூளு...


காதல்

ஒரு குவாட்டர் பாட்டில்

மாதிரி

பாட்டில் ஆடாது...

ஆனால்...

அதை போட்டால்

நீ

ஆடிடுவாய்...




அம்மன்


மாரியம்மன் பண்டிகைல

கோடி வீட்டு

சாந்தி மேல

அம்மன் இறங்கி

ஆடுகையில்

என்னிடம் வந்து

கேட்டாள்

"மகனே!

என்ன வேண்டும் கேள்!!"

எப்படி

கேட்பேன்

"நீ தான்" என்று.




அந்தி


படையல் வைத்து

ந்஢லைத்தை வெட்டி

ஆழ்குழாய் தோண்டி

...

ஒரு நீரூற்றை அடைய

இத்தனை பிராசையா

என்று கேட்கும்

சின்னஞ் சிறு

தாவரமே!

உனக்கு எப்படி

தெரியும்

காயும் உன் சிறகுகள்

இந்த அந்தியை

எவ்வளவு

கருப்பாக்குகிறதென்று.




பூக்கள்


பூக்களை

ரசிப்பவர்கள்

அதை செடியிலே

சிரிக்க

விடுவார்கள்!!!



Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

நான் ரசித்த கவிதைகள்

Posted by சீனு at 7/07/2004 02:23:00 PM 0 comments
Labels: கவிதை
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Indli - India News, Cinema, Cricket, Lifestyle
Tamilish NewsPaanai.com Tamil News Sharing Site Thiratti.com Tamil Blog Aggregator
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்